Tuesday, July 27, 2010

மௌன ராகம்- என் காதல்!

மனதின் சந்துகளில்,
உழல்கிறது காதல்!
கண்களின் ஓரங்களில்,
கசிகிறது காதல்!
காது மடல்களில்,
ரீங்கரிக்கும் காதல்!
உன்னையும் என்னையும்,
மௌனமாக்கிய காதல்!
உணர்வுகளின் படலத்தை
உருப்போட முடியாமல்- கவிதையாய்
வரிப்போடுகிறேன்!

- சிவசங்கர்.

1 comment:

Suji... said...

romba romba nalla iruku. pesumbo solren mitchathai