Tuesday, September 21, 2010

என்செய்வேன்?

உன் பெயரைத்
தாளில் எழுதினால்,
கவிதையாகிவிடுகிறது.
சுவற்றில் எழுதினால்,
ஓவியமாகிவிடுகிறது.
கல்லில் எழுதினால்,
சிற்பமாகிவிடுகிறது- ஆதலால்,
உன்பெயரை என்னுள் எழுதினேன்.
காதலாகிவிட்டது!

-- சிவசங்கர்.

Monday, September 13, 2010

கவிதைகளின் நேரம்!

பதிலுரைக்கவே விழைகிறேன்,
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!

-- சிவசங்கர்.

Wednesday, September 8, 2010

உன்னாலே! உன்னாலே!!

அழகிய விழிகளுடனும்,

அதிராத பேச்சுடனும்,

அழகிதான் நீ!

கர்வம்தான் எனக்கும்,

அவளின் காதலனாய்!



- சிவசங்கர்.