Tuesday, July 27, 2010

மௌன ராகம்- என் காதல்!

மனதின் சந்துகளில்,
உழல்கிறது காதல்!
கண்களின் ஓரங்களில்,
கசிகிறது காதல்!
காது மடல்களில்,
ரீங்கரிக்கும் காதல்!
உன்னையும் என்னையும்,
மௌனமாக்கிய காதல்!
உணர்வுகளின் படலத்தை
உருப்போட முடியாமல்- கவிதையாய்
வரிப்போடுகிறேன்!

- சிவசங்கர்.

Thursday, July 22, 2010

காதல் ஒரு கடிவிஷம்!

உன் விழிப்பார்வையில்
என் மனம் வீழ்ந்தது!
காதல் சொல்ல தைரியமில்லை
கவிதை சொல்ல வார்த்தையுமில்லை- எனக்கு!
புரியா உணர்வும்,
பிரியா மனமும் எனக்கு உண்டடி.
என் மனத்தை
உளவு செய்த நீ,
களவு செய்வது எப்போது?
--
சிவசங்கர்.

Tuesday, July 13, 2010

பேசா மடந்தையிடம்
சொல்லக் காதல்
எமது!
வெற்றுக் காகிதத்தில்
எழுதாக் கவிதை
எமது!
வெள்ளைச் சுவற்றில்
புனையா ஓவியம்
எமது!
சொல்லாக் காதல்
எனது!
புரியாக் காதல்
உனது!
காத்திருக்கிறேன் காதலுடன்,
கண்ணே உன் காதலுக்காய்!

--
சிவசங்கர்!

Wednesday, July 7, 2010

காதல் கதறல்!


மெல்ல மெல்ல விலகுகிறேன்

உன்னிலிருந்து நிழலாய்!

போகாதே காதல் வெளிச்சத்திலிருந்து-

கதறுகிறது என் காதல்!


- காதலுடன்,

சிவசங்கர்.

Thursday, July 1, 2010


கவிதை எழுத, காதலால் நேரமில்லை!
காதலை சொல்ல கவிதை வரவில்லை! சொல்லாக் காதலும்
எழுதாக் கவிதையும்
என்னோடு!


- செல்லாக் காசாய் இருப்பேன் உன் கண்ணசைவு வரை!
சிவசங்கர்.