Thursday, July 22, 2010

காதல் ஒரு கடிவிஷம்!

உன் விழிப்பார்வையில்
என் மனம் வீழ்ந்தது!
காதல் சொல்ல தைரியமில்லை
கவிதை சொல்ல வார்த்தையுமில்லை- எனக்கு!
புரியா உணர்வும்,
பிரியா மனமும் எனக்கு உண்டடி.
என் மனத்தை
உளவு செய்த நீ,
களவு செய்வது எப்போது?
--
சிவசங்கர்.

No comments: