Sunday, May 15, 2011

முத்தச்சுவை!


முத்தமிடவே நேரம் போதவில்லை.....

கவிதை வேணுமாம் கவிதை.....

இன்னும் நான்கு கணம்

உன் முத்தத்தைத் தொடர்....

கவிதை எழுத மனமிருந்தால்

எழுதித்தருகிறேன்,

அந்த முத்தச்சுவை பற்றி!

--சிவசங்கர்.

Sunday, February 13, 2011

முத்தம்!


முத்தக் காட்சியின்,
முதல் வரியில்,
முதல் எழுத்தானது,
உன் மூச்சும்,
என் மூச்சும்!

காதலர்தின நல்வாழ்த்துக்கள்!

Monday, December 13, 2010

காதல் கதறல்கள்....


காதலற்ற நொடிகளில்

கவிதை சொல்வது போலவே,

நீயற்ற நேரங்களில்,

பொழுதைக் கழிப்பது!

**********************************************************************************************

விரும்பிய விழுமியங்கள்,

விருப்பத்துடனே விழுகின்றன,

உனக்காய் எழுதும்

ஒவ்வொரு பொழுதும்.

**********************************************************************************************

வெளிகளற்ற வெளியில்,

மொழிகளற்றே பேசுகிறோம்,

நீயும் நானும்.

**********************************************************************************************
மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!

**********************************************************************************************
சத்தியமாய் நான்

குருடன்தான்,

உன்னைக் காணா

ஒவ்வொரு நொடியும்.

**********************************************************************************************
நீ வெட்கித் தலைகுனியும்

ஒவ்வொரு பொழுதுக்குமாய்த்

தவிக்கிறேன்,

வெட்கமின்றியே நானும்!
**********************************************************************************************
-சிவசங்கர்.

Saturday, December 4, 2010

முத்தம்.....


வருத்தமற்ற நொடிகள்

ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,

உன் செவ்விதழ் சிந்தும்

முத்தத்திற்காய்!


--சிவசங்கர்.

Monday, October 25, 2010

கவிதைகளின் வார்த்தைகள்!

என்னவளைப் பற்றிய கவிதைகளில்,

வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,

அவளின் அழகை முன்னிறுத்தி,

அடக்கியே வாசிக்கின்றன....


--சிவசங்கர்.