Wednesday, June 30, 2010

காதல் சதுரங்கம்!

நட்புக் குதிரைகள்
வெட்டுப்பட்டநேரத்தில்,
பதினாறு கட்டம் நகர
கலங்காமல் காத்திருக்க,
மந்திரியார் கூட்டத்துடன்
மந்தகாசமாய் புன்னகைக்கிறாய்!
வெட்டுப்பட்ட சேவகர்கள்
வெறித்த பார்வையால் எனை நோக்க,
பதினைந்து கட்டங்கள்
பல்நோக்கில் கடந்துவர,
ஒற்றை நகற்றலுக்குபின் என்னுடன்
விளையாட வருவாயா?
-
காத்திருக்கும்........
சிவசங்கர்.


1 comment:

Sudhakar M said...

மாப்ள எதோ சொல்ல வர...ஆனா