Tuesday, June 22, 2010


ஆங்கிலத்தில் புலமை இல்லை!
ஆங்கில வார்த்தைகளை ஆக்கிரமிக்கிறேன்
சில சமயம் களவாடுகிறேன், உனக்கு
குறுஞ் செய்தி அனுப்புவதற்கு!
காதலுக்கு மொழி ஒன்றும்
தடை அல்ல ஆனால்- என்
தமிழ் உன்னை இனிதாக்கக் காணோம்!
கண்ணில் தேங்கிய காதலும்,
வாய் தோய்ந்த வார்த்தையும்,
ரிப்ளை இல்லா மெசேஜ் உம்,
வளரும் என் காதலும்,
பின்னர் நீயும்,
என் தனிமையும்.
காதலுடன் காத்திருப்பேன்- கண்ணே
உன் வருகைக்காய்!

- சிவசங்கர்.

1 comment:

Suji... said...

romba nalla iruku. kirukal kavithai mariye iruku pa.