Monday, December 13, 2010

காதல் கதறல்கள்....


காதலற்ற நொடிகளில்

கவிதை சொல்வது போலவே,

நீயற்ற நேரங்களில்,

பொழுதைக் கழிப்பது!

**********************************************************************************************

விரும்பிய விழுமியங்கள்,

விருப்பத்துடனே விழுகின்றன,

உனக்காய் எழுதும்

ஒவ்வொரு பொழுதும்.

**********************************************************************************************

வெளிகளற்ற வெளியில்,

மொழிகளற்றே பேசுகிறோம்,

நீயும் நானும்.

**********************************************************************************************
மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!

**********************************************************************************************
சத்தியமாய் நான்

குருடன்தான்,

உன்னைக் காணா

ஒவ்வொரு நொடியும்.

**********************************************************************************************
நீ வெட்கித் தலைகுனியும்

ஒவ்வொரு பொழுதுக்குமாய்த்

தவிக்கிறேன்,

வெட்கமின்றியே நானும்!
**********************************************************************************************
-சிவசங்கர்.

21 comments:

Suji... said...

nalla iruku karadi sir,,,, alugatheenga....

அன்பரசன் said...

கவிதையைவிட அதற்கான படத்தேர்வு மிக அருமை.

arasan said...

அசத்தல் வரிகள்...

கலக்குங்க...

சிவசங்கர். said...

சுகன்யா...
நான் அழவில்லை...
இதெல்லாம் சும்மா....
மற்றும் நன்றிகள் பல...

சிவசங்கர். said...

அன்பு....
நீ எதைப் பார்த்து சொன்னேன்னு எனக்குத் தெரியும்லே....

நன்றி...

சிவசங்கர். said...

அரசரே,

நன்றிகள் பல...

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

மதன்செந்தில் said...

மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!//


இதழ்களின் இன்பக்கதறல்கள் கேட்கவில்லையா??

சிவசங்கர். said...

எஸ்.கே.

நன்றிகள் பல!

சிவசங்கர். said...

மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!//


இதழ்களின் இன்பக்கதறல்கள் கேட்கவில்லையா??///

மதனு, சத்தியமாய் நீதான்யா கவிஞன்...

Balaji Parasumanna said...

ஒரு மனிதன் வேலையற்று இருக்கும் பொழுது அவனால் என்னவெல்லாம் சிந்திக்க & செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.......

சிவசங்கர். said...

என்னைப் போல் ஒருவன்....

நன்றி பாலா...

Anonymous said...

சின்ன சின்ன வரிகளில் அழகாய் காதல் பளிச்சிடுகிறது.

சிவசங்கர். said...

இந்திரா....

நன்றி..நன்றி...நன்றி....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்டு....

:-)

( ஹி..ஹி.. கவிதை ட்புரியலேனாலும், சமாளிப்பமில்ல..ஹி..ஹி)

சிவசங்கர். said...

பட்டாபட்டியாருக்கு நன்றிகள் பல...

tamil cinema news said...

புகைப்பட தேர்வு அருமை :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்...

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_28.html

சிவசங்கர். said...

Vandhutten thala...
Nandri..

Admin said...

காதல் குருடா..உன் காதல் கதறல்கள் எனக்குப்பிடித்தது..

சிவசங்கர். said...

நன்றிங்க!!!