Thursday, October 14, 2010

ஏக்கம்!

ஐந்திலக்கச் சம்பளம்,

பெருசா ஒரு கம்ப்யூட்டர்,

வண்ணத் தொலைபேசி,

வாசமான சென்ட்டுகளும்,

வாய் நெறையச் சிரிப்போடு

ஊருவிட்டு ஊரு வந்தோம்.

மக்களும் பவுசுதான்,

மரியாதை பெருசுதேன்.

ஏசி ரூமுதான்,

பேச்செல்லாம் கோடிதான்,

விடுப்புக்குப் போறதெல்லாம்

விமான மார்க்கம்தான்.

கோமாளி வேடிக்கை,

கையில வாட்சும்,

சிறுசு பெருசா புத்தகமும்,

ஒட்டாம ஓடுது வாழ்க்கை!

மாடு மேச்சுப் பால் கறந்து,

ஏரோட்டி, ஊர் சுற்றி,

சிறுசு பெருசாப் பஞ்சாயத்துப் பண்ணி,

அம்மா கையில் சோறுண்ணும்

எம்மனோரைப் பார்க்கையிலே,

ஏங்கித்தான் போகுது மனசு..



--ஏக்கத்துடன்,

சிவசங்கர்.

4 comments:

Unknown said...

pangali ena pandrathu pulie valla pudichachu....

சிவசங்கர். said...

Athu sarithaan Hari...
:)

அன்பரசன் said...

அப்படியே நம்ம ஊருபக்கம் கொண்டு போயிட்டியே!!!

சிவசங்கர். said...

நன்றி அன்பு!