Tuesday, September 21, 2010

என்செய்வேன்?

உன் பெயரைத்
தாளில் எழுதினால்,
கவிதையாகிவிடுகிறது.
சுவற்றில் எழுதினால்,
ஓவியமாகிவிடுகிறது.
கல்லில் எழுதினால்,
சிற்பமாகிவிடுகிறது- ஆதலால்,
உன்பெயரை என்னுள் எழுதினேன்.
காதலாகிவிட்டது!

-- சிவசங்கர்.

Monday, September 13, 2010

கவிதைகளின் நேரம்!

பதிலுரைக்கவே விழைகிறேன்,
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!

-- சிவசங்கர்.

Wednesday, September 8, 2010

உன்னாலே! உன்னாலே!!

அழகிய விழிகளுடனும்,

அதிராத பேச்சுடனும்,

அழகிதான் நீ!

கர்வம்தான் எனக்கும்,

அவளின் காதலனாய்!



- சிவசங்கர்.

Tuesday, July 27, 2010

மௌன ராகம்- என் காதல்!

மனதின் சந்துகளில்,
உழல்கிறது காதல்!
கண்களின் ஓரங்களில்,
கசிகிறது காதல்!
காது மடல்களில்,
ரீங்கரிக்கும் காதல்!
உன்னையும் என்னையும்,
மௌனமாக்கிய காதல்!
உணர்வுகளின் படலத்தை
உருப்போட முடியாமல்- கவிதையாய்
வரிப்போடுகிறேன்!

- சிவசங்கர்.

Thursday, July 22, 2010

காதல் ஒரு கடிவிஷம்!

உன் விழிப்பார்வையில்
என் மனம் வீழ்ந்தது!
காதல் சொல்ல தைரியமில்லை
கவிதை சொல்ல வார்த்தையுமில்லை- எனக்கு!
புரியா உணர்வும்,
பிரியா மனமும் எனக்கு உண்டடி.
என் மனத்தை
உளவு செய்த நீ,
களவு செய்வது எப்போது?
--
சிவசங்கர்.