Showing posts with label கவிதை.. Show all posts
Showing posts with label கவிதை.. Show all posts

Sunday, May 15, 2011

முத்தச்சுவை!


முத்தமிடவே நேரம் போதவில்லை.....

கவிதை வேணுமாம் கவிதை.....

இன்னும் நான்கு கணம்

உன் முத்தத்தைத் தொடர்....

கவிதை எழுத மனமிருந்தால்

எழுதித்தருகிறேன்,

அந்த முத்தச்சுவை பற்றி!

--சிவசங்கர்.

Thursday, October 14, 2010

ஏக்கம்!

ஐந்திலக்கச் சம்பளம்,

பெருசா ஒரு கம்ப்யூட்டர்,

வண்ணத் தொலைபேசி,

வாசமான சென்ட்டுகளும்,

வாய் நெறையச் சிரிப்போடு

ஊருவிட்டு ஊரு வந்தோம்.

மக்களும் பவுசுதான்,

மரியாதை பெருசுதேன்.

ஏசி ரூமுதான்,

பேச்செல்லாம் கோடிதான்,

விடுப்புக்குப் போறதெல்லாம்

விமான மார்க்கம்தான்.

கோமாளி வேடிக்கை,

கையில வாட்சும்,

சிறுசு பெருசா புத்தகமும்,

ஒட்டாம ஓடுது வாழ்க்கை!

மாடு மேச்சுப் பால் கறந்து,

ஏரோட்டி, ஊர் சுற்றி,

சிறுசு பெருசாப் பஞ்சாயத்துப் பண்ணி,

அம்மா கையில் சோறுண்ணும்

எம்மனோரைப் பார்க்கையிலே,

ஏங்கித்தான் போகுது மனசு..



--ஏக்கத்துடன்,

சிவசங்கர்.

உந்தன் நினைவு!


வெட்கமின்றிப் பேசித் தீர்த்த
வார்த்தைகளும்,

இடைவெளியற்று கட்டுற்றிருந்த
நினைவுகளும்,

தனிமையிலும் வெறுமையிலும்

நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது
உன்னை!
--சிவசங்கர்.

Wednesday, October 13, 2010

காதலியே.......


நான் கொடுத்த

முத்தமெல்லாம்

கணக்கிட்டு வைக்காமலிருக்கும்

நீயெல்லாம் என் காதலியா?


--சிவசங்கர்.

Saturday, October 9, 2010

முத்தம்பற்றி....


அழகான உன் உதட்டோர

மச்சத்தின்,

இதமான தழுவல்தான்

முத்தமோ?


--சிவசங்கர்.

Monday, September 13, 2010

கவிதைகளின் நேரம்!

பதிலுரைக்கவே விழைகிறேன்,
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!

-- சிவசங்கர்.