Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, December 13, 2010

காதல் கதறல்கள்....


காதலற்ற நொடிகளில்

கவிதை சொல்வது போலவே,

நீயற்ற நேரங்களில்,

பொழுதைக் கழிப்பது!

**********************************************************************************************

விரும்பிய விழுமியங்கள்,

விருப்பத்துடனே விழுகின்றன,

உனக்காய் எழுதும்

ஒவ்வொரு பொழுதும்.

**********************************************************************************************

வெளிகளற்ற வெளியில்,

மொழிகளற்றே பேசுகிறோம்,

நீயும் நானும்.

**********************************************************************************************
மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!

**********************************************************************************************
சத்தியமாய் நான்

குருடன்தான்,

உன்னைக் காணா

ஒவ்வொரு நொடியும்.

**********************************************************************************************
நீ வெட்கித் தலைகுனியும்

ஒவ்வொரு பொழுதுக்குமாய்த்

தவிக்கிறேன்,

வெட்கமின்றியே நானும்!
**********************************************************************************************
-சிவசங்கர்.

Saturday, December 4, 2010

முத்தம்.....


வருத்தமற்ற நொடிகள்

ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,

உன் செவ்விதழ் சிந்தும்

முத்தத்திற்காய்!


--சிவசங்கர்.

Monday, October 25, 2010

கவிதைகளின் வார்த்தைகள்!

என்னவளைப் பற்றிய கவிதைகளில்,

வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,

அவளின் அழகை முன்னிறுத்தி,

அடக்கியே வாசிக்கின்றன....


--சிவசங்கர்.

Tuesday, October 19, 2010

காதலியற்ற தீபாவளி!


உனைப் பிரிந்து

கொண்டாடும் தீபாவளியில்

வெடிக்கப் போவது பட்டாசுகள் மட்டுமல்ல..

என் மனமும்தான்....



--சிவசங்கர்

Monday, October 18, 2010

என் பார்வை..

காதலுக்காய் ஏங்கும்
என் கலங்கிய முகத்துடன்,
மலர்ந்த உன் முகத்தை
மறைந்திருந்தே பார்க்கிறேன்!


--சிவசங்கர்.
(இரவு ராசாவின் இனிய புகைப்படத்தைப் பார்க்கையில் தோன்றியது..நீங்களும் பாருங்களேன்)

Saturday, October 16, 2010

காதல்...கவி....


விலகியிருந்த என்னை

மீண்டும் கவியியற்றத் தூண்டியது

உன் காதல்!


தள்ளியிருந்த என்னை

காதலிக்கத் தூண்டியது

உன் முத்தம்!


காதலைத் தூண்டிய நீயும்,

கவிதையைத் தூண்டிய காதலும்,

உன்காதல் வழிவந்த முத்தமும்,

நீக்கமற நிறைந்துவிட்டது

என்மனதில்!


-- சிவசங்கர்.


Thursday, October 14, 2010

முத்தம்....

மௌனமான நொடியில்

உன் பூவிதழில் கொடுத்த

ஈரமான முத்தம்,

இனித்துக்கொண்டே இருக்கிறது

என்னில்!


--சிவசங்கர்.

Saturday, October 9, 2010

காதல் வரைமுறை!


நீ பெயர்த்த மனதைப்

பெயரளவில் கவர்ந்துகொண்டால்,

காதல்!


--சிவசங்கர்.

Friday, October 8, 2010

மோதல்-காதல்!


மோதல் செய்த வினை

இன்று

காதல் செய்கிறேன்!



-- சிவசங்கர்.

Thursday, October 7, 2010

காதல் முத்தம்!


விருட்டென எழுந்து செல்கையில்

என் கரம்பிடித்துக் கொடுத்த

இதழோர முத்தத்திற்காய்

காதலித்துக் கொண்டே

இருக்கலாம் உன்னை!


--சிவசங்கர்.

Tuesday, October 5, 2010

அழகு முற்றம்!

எத்தனை முயன்றும்
தோற்றேன்!
உன் அழகுக்கு முன்னால்
என் கவிதையெல்லாம்
அழகாகவே தோன்றவில்லை!

--சிவசங்கர்.

Tuesday, September 21, 2010

என்செய்வேன்?

உன் பெயரைத்
தாளில் எழுதினால்,
கவிதையாகிவிடுகிறது.
சுவற்றில் எழுதினால்,
ஓவியமாகிவிடுகிறது.
கல்லில் எழுதினால்,
சிற்பமாகிவிடுகிறது- ஆதலால்,
உன்பெயரை என்னுள் எழுதினேன்.
காதலாகிவிட்டது!

-- சிவசங்கர்.

Sunday, May 9, 2010

காதலுடன்.......


கனவுகளுக்காய்
உறங்கப் போகிறேன்
காதலுடன்!!

--சிவசங்கர்.

உன்னைப் பற்றி.......


கவிதை எழுத எனக்கு
கருப்பொருள் போதவில்லை!
கருப்பொருளின்றி கவிதை
முனையவும் ஆர்வமில்லை!
கவிதையும் கருப்பொருளுமின்றி
எழுத மனமில்லை!- ஆனால்
உன்னைப் பார்த்தால், ஏனோ
பல கவிதை தோணுதடி!!

- சிவசங்கர்.

காதல்!


கிழிக்கப்பட்ட மனதில்
ஒதுக்கப்பட்ட பூக்களுடன்
இன்னும் காதலிக்கிறேன்
உன்னை!

- சிவசங்கர்.

Tuesday, April 20, 2010

காதல் செய்!


கருத்துரு கண்ணொடு
விழித்தெழும் நிதமதுவும்
பனித்திரு பிறை நுதலும்
வெயில் பொழுதும் பனியாக்க,
பனியடித்தால் வெம்மையாக்க
காதல் செய்வீர்!
மாதுவை அன்றேல் மதுவை!