காதல் குருடன்!
கவிதை என்று நினைத்து எழுதிய சில கிறுக்கல்கள்!!
Thursday, October 7, 2010
காதல் முத்தம்!
விருட்டென எழுந்து செல்கையில்
என் கரம்பிடித்துக் கொடுத்த
இதழோர முத்தத்திற்காய்
காதலித்துக் கொண்டே
இருக்கலாம் உன்னை!
--சிவசங்கர்.
Tuesday, October 5, 2010
அழகு முற்றம்!
எத்தனை முயன்றும்
தோற்றேன்!
உன் அழகுக்கு முன்னால்
என் கவிதையெல்லாம்
அழகாகவே தோன்றவில்லை!
--சிவசங்கர்.
Tuesday, September 21, 2010
என்செய்வேன்?
உன் பெயரைத்
தாளில் எழுதினால்,
கவிதையாகிவிடுகிறது.
சுவற்றில் எழுதினால்,
ஓவியமாகிவிடுகிறது.
கல்லில் எழுதினால்,
சிற்பமாகிவிடுகிறது- ஆதலால்,
உன்பெயரை என்னுள் எழுதினேன்.
காதலாகிவிட்டது!
-- சிவசங்கர்.
Monday, September 13, 2010
கவிதைகளின் நேரம்!
பதிலுரைக்கவே விழைகிறேன்,
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!
-- சிவசங்கர்.
Wednesday, September 8, 2010
உன்னாலே! உன்னாலே!!
அழகிய விழிகளுடனும்,
அதிராத பேச்சுடனும்,
அழகிதான் நீ!
கர்வம்தான் எனக்கும்,
அவளின் காதலனாய்!
- சிவசங்கர்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
online stats calculator