Friday, October 15, 2010

காதலியின் முத்தம்....

நீ

திகட்டத் திகட்டக்

கொடுத்த முத்தம்,

உன்னைக் காதலிக்காமல்

இருக்க விடுவதில்லை!



-- சிவசங்கர்.

Thursday, October 14, 2010

ஏக்கம்!

ஐந்திலக்கச் சம்பளம்,

பெருசா ஒரு கம்ப்யூட்டர்,

வண்ணத் தொலைபேசி,

வாசமான சென்ட்டுகளும்,

வாய் நெறையச் சிரிப்போடு

ஊருவிட்டு ஊரு வந்தோம்.

மக்களும் பவுசுதான்,

மரியாதை பெருசுதேன்.

ஏசி ரூமுதான்,

பேச்செல்லாம் கோடிதான்,

விடுப்புக்குப் போறதெல்லாம்

விமான மார்க்கம்தான்.

கோமாளி வேடிக்கை,

கையில வாட்சும்,

சிறுசு பெருசா புத்தகமும்,

ஒட்டாம ஓடுது வாழ்க்கை!

மாடு மேச்சுப் பால் கறந்து,

ஏரோட்டி, ஊர் சுற்றி,

சிறுசு பெருசாப் பஞ்சாயத்துப் பண்ணி,

அம்மா கையில் சோறுண்ணும்

எம்மனோரைப் பார்க்கையிலே,

ஏங்கித்தான் போகுது மனசு..



--ஏக்கத்துடன்,

சிவசங்கர்.

உந்தன் நினைவு!


வெட்கமின்றிப் பேசித் தீர்த்த
வார்த்தைகளும்,

இடைவெளியற்று கட்டுற்றிருந்த
நினைவுகளும்,

தனிமையிலும் வெறுமையிலும்

நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது
உன்னை!
--சிவசங்கர்.

முத்தம்....

மௌனமான நொடியில்

உன் பூவிதழில் கொடுத்த

ஈரமான முத்தம்,

இனித்துக்கொண்டே இருக்கிறது

என்னில்!


--சிவசங்கர்.

Wednesday, October 13, 2010

காதலியே.......


நான் கொடுத்த

முத்தமெல்லாம்

கணக்கிட்டு வைக்காமலிருக்கும்

நீயெல்லாம் என் காதலியா?


--சிவசங்கர்.