Monday, December 13, 2010

காதல் கதறல்கள்....


காதலற்ற நொடிகளில்

கவிதை சொல்வது போலவே,

நீயற்ற நேரங்களில்,

பொழுதைக் கழிப்பது!

**********************************************************************************************

விரும்பிய விழுமியங்கள்,

விருப்பத்துடனே விழுகின்றன,

உனக்காய் எழுதும்

ஒவ்வொரு பொழுதும்.

**********************************************************************************************

வெளிகளற்ற வெளியில்,

மொழிகளற்றே பேசுகிறோம்,

நீயும் நானும்.

**********************************************************************************************
மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!

**********************************************************************************************
சத்தியமாய் நான்

குருடன்தான்,

உன்னைக் காணா

ஒவ்வொரு நொடியும்.

**********************************************************************************************
நீ வெட்கித் தலைகுனியும்

ஒவ்வொரு பொழுதுக்குமாய்த்

தவிக்கிறேன்,

வெட்கமின்றியே நானும்!
**********************************************************************************************
-சிவசங்கர்.

Saturday, December 4, 2010

முத்தம்.....


வருத்தமற்ற நொடிகள்

ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,

உன் செவ்விதழ் சிந்தும்

முத்தத்திற்காய்!


--சிவசங்கர்.

Monday, October 25, 2010

கவிதைகளின் வார்த்தைகள்!

என்னவளைப் பற்றிய கவிதைகளில்,

வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,

அவளின் அழகை முன்னிறுத்தி,

அடக்கியே வாசிக்கின்றன....


--சிவசங்கர்.

Tuesday, October 19, 2010

காதலியற்ற தீபாவளி!


உனைப் பிரிந்து

கொண்டாடும் தீபாவளியில்

வெடிக்கப் போவது பட்டாசுகள் மட்டுமல்ல..

என் மனமும்தான்....



--சிவசங்கர்

Monday, October 18, 2010

என் பார்வை..

காதலுக்காய் ஏங்கும்
என் கலங்கிய முகத்துடன்,
மலர்ந்த உன் முகத்தை
மறைந்திருந்தே பார்க்கிறேன்!


--சிவசங்கர்.
(இரவு ராசாவின் இனிய புகைப்படத்தைப் பார்க்கையில் தோன்றியது..நீங்களும் பாருங்களேன்)