Monday, October 25, 2010

கவிதைகளின் வார்த்தைகள்!

என்னவளைப் பற்றிய கவிதைகளில்,

வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,

அவளின் அழகை முன்னிறுத்தி,

அடக்கியே வாசிக்கின்றன....


--சிவசங்கர்.

Tuesday, October 19, 2010

காதலியற்ற தீபாவளி!


உனைப் பிரிந்து

கொண்டாடும் தீபாவளியில்

வெடிக்கப் போவது பட்டாசுகள் மட்டுமல்ல..

என் மனமும்தான்....



--சிவசங்கர்

Monday, October 18, 2010

என் பார்வை..

காதலுக்காய் ஏங்கும்
என் கலங்கிய முகத்துடன்,
மலர்ந்த உன் முகத்தை
மறைந்திருந்தே பார்க்கிறேன்!


--சிவசங்கர்.
(இரவு ராசாவின் இனிய புகைப்படத்தைப் பார்க்கையில் தோன்றியது..நீங்களும் பாருங்களேன்)

Saturday, October 16, 2010

காதல்...கவி....


விலகியிருந்த என்னை

மீண்டும் கவியியற்றத் தூண்டியது

உன் காதல்!


தள்ளியிருந்த என்னை

காதலிக்கத் தூண்டியது

உன் முத்தம்!


காதலைத் தூண்டிய நீயும்,

கவிதையைத் தூண்டிய காதலும்,

உன்காதல் வழிவந்த முத்தமும்,

நீக்கமற நிறைந்துவிட்டது

என்மனதில்!


-- சிவசங்கர்.


Friday, October 15, 2010

காதலியின் முத்தம்....

நீ

திகட்டத் திகட்டக்

கொடுத்த முத்தம்,

உன்னைக் காதலிக்காமல்

இருக்க விடுவதில்லை!



-- சிவசங்கர்.