காதல் குருடன்!
கவிதை என்று நினைத்து எழுதிய சில கிறுக்கல்கள்!!
Monday, October 25, 2010
கவிதைகளின் வார்த்தைகள்!
என்னவளைப் பற்றிய கவிதைகளில்,
வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,
அவளின் அழகை முன்னிறுத்தி,
அடக்கியே வாசிக்கின்றன....
--சிவசங்கர்.
Tuesday, October 19, 2010
காதலியற்ற தீபாவளி!
உனைப் பிரிந்து
கொண்டாடும் தீபாவளியில்
வெடிக்கப் போவது பட்டாசுகள் மட்டுமல்ல..
என் மனமும்தான்....
--சிவசங்கர்
Monday, October 18, 2010
என் பார்வை..
காதலுக்காய் ஏங்கும்
என் கலங்கிய முகத்துடன்,
மலர்ந்த உன் முகத்தை
மறைந்திருந்தே பார்க்கிறேன்!
--சிவசங்கர்.
(
இரவு ராசாவின்
இனிய புகைப்படத்தைப் பார்க்கையில் தோன்றியது..நீங்களும்
பாருங்களேன்
)
Saturday, October 16, 2010
காதல்...கவி....
விலகியிருந்த என்னை
மீண்டும் கவியியற்றத் தூண்டியது
உன் காதல்!
தள்ளியிருந்த என்னை
காதலிக்கத் தூண்டியது
உன் முத்தம்!
காதலைத் தூண்டிய நீயும்,
கவிதையைத் தூண்டிய காதலும்,
உன்காதல் வழிவந்த முத்தமும்,
நீக்கமற நிறைந்துவிட்டது
என்மனதில்!
-- சிவசங்கர்.
Friday, October 15, 2010
காதலியின் முத்தம்....
நீ
திகட்டத் திகட்டக்
கொடுத்த முத்தம்,
உன்னைக் காதலிக்காமல்
இருக்க விடுவதில்லை!
-- சிவசங்கர்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
online stats calculator