Sunday, May 9, 2010

காதல்!!


பெண்ணுக்காய் எழுத மனமின்றி
பேனாவுக்காய் எழுதினேன்
பல கவிதை!- உனைக்
காதலிப்பதற்கு முன்னால்!
உன்விழிப் பார்வை
பட்டவுடன் பேனாவாய்
எழுதுகிறது பல கவிதை!

- பேனாவுடன் சிவசங்கர்.

உனக்காய்!


இனிய இரவில்,
இதயப் பூக்களுடன்
இன்னும் வாழ்கிறேன்-
உனக்காய்!

- சிவசங்கர்.

உன்னைப் பற்றி.......


கவிதை எழுத எனக்கு
கருப்பொருள் போதவில்லை!
கருப்பொருளின்றி கவிதை
முனையவும் ஆர்வமில்லை!
கவிதையும் கருப்பொருளுமின்றி
எழுத மனமில்லை!- ஆனால்
உன்னைப் பார்த்தால், ஏனோ
பல கவிதை தோணுதடி!!

- சிவசங்கர்.

காதல்!


கிழிக்கப்பட்ட மனதில்
ஒதுக்கப்பட்ட பூக்களுடன்
இன்னும் காதலிக்கிறேன்
உன்னை!

- சிவசங்கர்.

Tuesday, April 20, 2010

காதல் செய்!


கருத்துரு கண்ணொடு
விழித்தெழும் நிதமதுவும்
பனித்திரு பிறை நுதலும்
வெயில் பொழுதும் பனியாக்க,
பனியடித்தால் வெம்மையாக்க
காதல் செய்வீர்!
மாதுவை அன்றேல் மதுவை!