Showing posts with label என்னைப்பற்றி.. Show all posts
Showing posts with label என்னைப்பற்றி.. Show all posts

Sunday, May 9, 2010

எனைப் பற்றி........


பார் பிடித்த தினமதுவும்,
பால் கறந்த பல நாளும்,
சீர் உழுத பெருந்தினமும்,
கார் பொய்த்த நாள்தனிலே,
கருந்தினமாய் ஆகுமடா!
ஏர் பிடித்துத் தினந்தோறும்
ஏகாந்தமாய் வாழ்ந்து வந்தால்
பார் பிடித்த கிறுக்கெல்லாம்
சுகந்தமாய் மாறுமடா!!
பார்பிடிக்க, ஏர்பிடிக்க
மறந்த ஓர்தினத்தில்,
பிறப்பதற்கும் ஆளில்லை,
இறப்போம் அன்றோ?!
அறிவுரையை கவி பொழிந்து,
அறிவியலில் ஐக்கியமான
ஒரு கையாலாகாத கவிஞன்!
-நான்.

---சிவசங்கர்.